பழைய காலத்து நாணயங்கள், இப்போ நாம உபயோகிக்காத தாயக்கட்டை, பல்லாங்குழி போன்ற விளையாட்டுப் பொருள்கள், மரப்பாச்சிப் பொம்மையைப் பார்த்தாக் கண்ணுல நீர் வருதுடா…
ஆனா, வாய்ப்பாடு புத்தகத்தைக் கூட இப்போ யாரும் படிக்கறதில்லன்னு காசு கள்ளன் சொல்றது தப்புதானே, எங்க ஸ்கூலில் இப்பவும் வாய்ப்பாடு படிக்கிறோம், எழுதிப் பார்க்கறோமே. ஆனா, நிறைய அந்தக் காலப் பொருளை எல்லாம் திரும்பப் பாக்கும்போது சுவாரசியமா இருந்தது. அப்புறம், நாணயங்கள் எப்படி தயாராகத் தொடங்கிச்சு…இப்போ எங்கே செய்யுறாங்க என்ற விவரம் எல்லாம் நல்ல இருந்துச்சுடா.
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, சுதந்திரப் போராட்ட காலத்துல நேதாஜி அவராகவே தேசிய வங்கி அமைச்சு லட்ச ரூபாய் நோட்டு கூட கொண்டு வந்தாராம். அருமையான சேதிகள்..