தேவனின் திருப்பாடல்கள்
விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு.