நம் நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு நம் நாட்டுத்தலைவர்கள் தொடர்ந்து பல்லாண்டுகள் போராட்டங்களை மேற்கொண்டபோது
ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டுத் துன்புற்றவர்களில் ஜவஹர்லால் நேருவும் குறிப்பிடத்தக்கவராவார். சிறைத்துன்பம் அனுபவித்த நேரு
த்ம் மகள் இந்திராவுக்குத் தொடர்ந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பே நேருவின் சுயசரிதையாக அமைந்தது.
பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள எழுத்தாளர் ஆர்.வி.சம்பத் ‘ என் இளமை நாட்கள்’ என்ற பெயரில் நேருவின் இளமைப்பருவ
நிகழ்ச்சிகளைத் தமிழாக்கம் செய்துள்ளார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத் தொடக்க காலத்தை நாம் தெரிந்துகொள்ள இந்நூல் துணை செய்கிறது.