நம்மைபோல் பணக்காரர் :
நயன்தரா ஸஹ்கல் அவசரக்கால (Emergency) சம்பவத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். சதிக்கொடுமையை விவரித்திற்கும் விதம் நம் நெஞ்சைத் தொடுகிறது. “ வெள்ளையனே வெளியேறு” பற்றி பல சரித்திர ஆவணங்களுடன் எழுதியுள்ளார். வருங்கால சந்ததிகள் தெரிந்துகொள்ள நம்நாட்டு சரித்திரத்தையும் சுருக்கமாக கடைசி பக்கங்களில் கூரியுள்ளார்.
ராம் இலண்டனில் ‘காக்கனி; ஆங்கிலம் பேசும் கன்னிப் பெண்ணை இரண்டாவது மனைவியாக அடைந்து தாயகம் வருகிறார். அவர் படும் துயரம், அன்னாரின் துர்மரணமும் பரிதாபகரமானது. ஸோனாலி ஐ.ஸி.எஸ் பட்டம் பெற்று இலஞ்ச லாவண்யம் இல்லாமல் பணிபுரியும் பொழுது. எதிர் நீச்சல் அடிக்கிறார். அந்தப் போராட்டத்தில் பதவியிறக்கம் கான்கிறார். சில இடங்களில் நகைச்சுவையும் மிளிர்கிறது, காளவாயில் தொழிலாளர்கள் தூக்கியெரியப்படுவது பயங்கரமாக உள்ளது. ஆங்காங்கே T.S.Elliot கவிதைகள் கூறப்பட்டு இலக்கிய இரசனையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
மொழிபெயர்ப்பாளார் கி.இராமன் அரசுப் பணியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது சிறுகதைகள் மாதப் பத்திருக்கைகளில் வந்துள்ளன. சில விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் படித்துள்ளார். மேலும் ஆன்மீக கட்டுரைகளை 15 ஆண்டுகளாக எழுதி வருகிறார். துளசி இராமாயணமும் மொழிபெயர்த்துள்ளார்.