நூல் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர மக்களி வாழ்வியலை பதிவு செய்யும் மிக முக்கிய மான நூல் இது. வட்டக் கோட்டை முதல் நீரோடி வரையிலான அனைத்து கடலோர கிராமங்கள் நகரங்களின் குறிப்புகள், கடலோர மக்கள் பண்டை காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தும் பிறமொழிக் கலப்பில்லாத பழந்தமிழ்ச் சொற்கள், சமூகத்தின் வாழ்வியலை பதிவு செய்யும் பாடல்கள் என்று மிகச் சிறந்த ஆவணமாக இந்நூல் விளங்குகிறது.
சமூக ஆய்வில் ஈடுபடுவோரும், தொல்குடி தமிழ் சமூகத்தின் வாழ்வியலை நோக்கிய தேடலில் இருப்போரும், தமிழில் ஆராய்ச்சிகள் செய்வோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது. கவிஞர் ஆ. தாமஸ் ஆவணப்படுத்தியுள்ள இந்நூல் பிற்கால சந்ததியினர்க்கும், பிற சமூகத்தவர்களுக்கும் மிகுந்த பயன் நல்கும் என்பதில் ஐயமில்லை.
No product review yet. Be the first to review this product.