உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்
க.நா.சு. என்ற தனி மனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ‘நிலவளம்’ எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. ‘அவமானச் சின்னம்’ எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. ‘தாசியும் தபசியும்’ எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. ‘மந்திரமலை’ எழுதிய தாமஸ் மன்னைத் தெரிந்திருக்காது. ‘சித்தார்த்தனை’ எழுதிய ஹெர்மன் ஹெஸையைத் தெரிந்திருக்காது. ‘விலங்குப் பண்ணை’ எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லைத் தெரிந்திருக்காது. ‘தேவமலர்’ எழுதிய செல்மா லாகர்லவ்வைத் தெரிந்திருக்காது. இன்னும் எட்கர் ஆலன்போவை, காஃப்காவை, சோல்ஜெனித்சனை, என்று உலக இலக்கியங்களை தமிழ் இலக்கியப் பரப்பில் பார்வைக்கு வைத்தவர். உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவவிட்டவர்.