சங்கர் நாராயண் “சேபிள் சங்கர்” என்கிற பெயரில் வலைப்பதிவில் பிரபலமானவர். எழுத்தாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், குறும்பட இயக்குனர், வசனகர்த்தா, விநியோகஸ்தர் என்று திரைத்துறையின் வர்த்தக சூட்சுமத்தை நன்கு அறிந்தவர். இவரது முந்தைய நூல்களான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் என்கிற சிறுகதை தொகுப்பும், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா போன்ற புத்தகங்களும் பெரும் வரவேற்பை பெற்ற நூல்களாகும். பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான 18 சிறுகதைகளின் தொகுப்பே தெர்மக்கோல் தேவதைகளாகும்.
”தெர்மக்கோல் தேவதைகள்” தொகுப்பில் மொத்தம் பதினெட்டு சிறுகதைகள் இருக்கிறது. முதல் கதையில் ஒரு உதவி இயக்குனரின் பார்வையில் நகர்கிறது. சினிமா உலகத்தில் இவரும் ஒருவராக இருப்பதால் சுயஎள்ளல் மிக நன்றாக வருகிறது. இப்படி ஒவ்வொரு கதையாக கேபிள் நம்மை இன்னொரு உலகத்திற்க்குள் அழைத்துச்செல்கிறார். இவரின் கதைகளில் வரும் பெண்களைப்பற்றி தனி ஆய்வே செய்யலாம். நுணுக்கமான பெண்களின் உலகிற்க்குள் இவர் அந்த பெண்களின் மனநிலையோடு கதைகளை விவரிக்கிறார்.- குகன்