ரப்பர்
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அக்ச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவன் அடையும் தரிசனமே இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும் போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம்.