ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி என்ற இந்த நாவல் வழியாக தமிழகத்தின் சமகால வரலாறு பதிவாகியிருக்கிறது. துள்ளலான நடையில் கேலியும்
கிண்டலும், பகடியும் சேர்ந்து வாசிப்பனுபவத்தை வேகமானதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் மாற்றுகிறது. ஒரே இடத்தில் கதை நடப்பதாக இருந்தாலும்
அது பல்வேறு வகைமாதிரியான பாத்திரங்களின் பிரச்சினைகளை, தமிழகத்தின் நடைமுறையில் மக்களின் கதைகளை உரையாடுகிற ஒரு
பொதுவெளியில் நின்று பேசுகிறது. மேலோட்டங்களைப் பார்த்தால் இது ஒரு விளையாட்டுத் தனம்போல இருந்தாலும் உண்மையில்
சமுகத்தின் குரூரத்தைச் சொல்கிற நாவல்.