புல்லின் தழல்
அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்டுவது அதைத்தான்.வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.