இந்நூலில் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ள சினிமாக்களின் உள்ளடக்கமாய் துலங்கும் கதைகள் ஒவ்வொன்றும் என் உள்ளம் கவர்ந்தவை.நல்ல கதைகள் இன்றி நல்ல சினிமா இல்லை என்று நம்புவன் நான்.ஒவ்வொரு நல்ல கதையையும் காட்சி வடிவில் பார்த்து ரசித்தவன் நான்.சினிமாக்களாகப் பார்க்க இயலாமற் போகிறவர்களுக்காக இக்கதைகளை நான் இந்நூலில் தந்திருக்கிறேன்.இந்நூலில் நான் விவரித்திருக்கும் (சினிமாக்)கதைகள் உங்களை கண்டிப்பாக ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
-எஸ்.இளங்கோ