வீட்டில் பல்லி, எறும்பு, ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சி, வெங்காயப் பாச்சா, இரவில் கத்தும் ச்வர்க்கோழி இப்படி எத்தனை உயிரினங்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எத்தனை பேர் நம்முடைய நண்பர்கள்? ம்ம்ம்ம்ம்...கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது இல்லைஇயா? ஆனால் பாருங்கள்! இந்தக் கதையில் வருகிற பாருவுக்கு எத்தனை நண்பர்கள் வருகிறார்கல்! பாரு எல்லோர் மீதும் அன்பு செலுத்துகிறாள். பாருவின் பொழுது தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் கழியவில்லை. அவள் வீடியோ கேம்ஸ் ஆடவில்லை. அவள் அவளுடைய நண்பர்களுடன் பொழுதைப் போக்குகிறாள். எப்படி என்று தெரியுமா? கதையை வாசித்துப்பாருங்கள் செல்லங்களே!