பிடுங்கிக்கொண்டு ஓடுகிறவர்களை,மறைத்துச் சாப்பிகிறவர்களை,அடாவடி செய்து அபகரிப்பவர்களை எல்லா இடங்களிலும் பார்க்கிறோம்.நல்லவேளையாக எல்லோருமே இப்படி இல்லை என்பதும்,இவர்களுக்கு நேர் எதிராக சிலரும் இருக்கவே செய்கிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறோம்.
மற்றவர்களுக்காக கொடுக்கிறவர்கள்,வாதாடுகிறவர்கள்,கொதித்து எழுகிறவர்கள்,மற்றவர்களுக்காகவே வாழ்கிறவர்கள் இருக்கிறார்களே...அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால்,இளம் தலைமுறையினருக்கு ‘இப்படியும் இருக்கலாம்,இருக்கிறார்கள்’ என்பதுபோன்ற வழிகாட்டியாக இருக்குமே என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்நூல்.
வாருங்கள்,நல்ல மனங்களை தரிசிக்கலாம்!