இந்தக் காலம் தொடர்ந்து சிதறுண்ட மனிதர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. எல்லாவிதமான இலட்சியவாதங்களும் அழிந்த ஒரு குப்பைமேட்டில் மனிதன் எங்கோ இரகசியமாக இறந்த போன ஒரு பறவையைப் போல கிடக்கிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இந்த நாவல். அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்தும் ஏற்ப்படுத்தும் அவநம்பிக்கையும் அர்த்தமின்மையையும் அவனை நிலைகுலைய வைக்கிறது. இந்த அர்த்தமின்மையை தன்னைத் தானே சிதைத்துக்கொள்வதன் மூலம் கடந்து செல்ல முற்படுகிறான். மனப் பிறழ்வும் ஆழமான கசப்பும் அவனை அவனது காலத்தின் உண்மையான பிரதிநிதியாக மாற்றுகிறது.