என்.ஸ்ரீராமின் மொழி எளிமையானது.வெளிச்சம் பரவுவது போல மெளனமாக,சீராகப் படருகிறது.ஸ்ரீராமின் கதைகளில் உரத்த தோனி இல்லை,தனிமை உணர்வை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்,குறைவான உரையாடல்களே இக்கதைகளின் பலம்.மனிததுயரங்களை ஆற்றுப்படுத்துவது போல இயற்கை காட்சி தருகிறது.பல கதைகளில் வெயிலும் நிழலும் மனநிலையின் புறவடிவம் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன.