வ.கீராவின் பெரும்பான்மையான கதைகளில் ஒரு நேர்கோட்டு வாழ்க்கை இருக்கிறது. கலையும், அரசியலும் அவற்றை நெறிப்படுத்துகின்றன. கிராமம் என்றால் அழகும், பசுமையும் என்கிற கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன . புதிய நெடுஞசாலைகளின் வரவால் சமன் குலைந்த கிராமத்திலிருந்து பதிவு செய்யப்படுகின்றன. கிராமத்திலிருந்து நகரத்திற்குப் பெயர்ந்தும் புதிய வாழ்க்கையும் , பயணங்களும் அவனைப் பெரிதாக மாற்றாமல் வைத்திருக்கிறது . அவை பெண்களின் வாழ்க்கையை சரடாகக் கொண்டு புனையப்பட்டிருக்கின்றன.