இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?
நான் இந்திஉயச் சுதந்திரப் போராட்ட வீரர்களினிடையே கடைசித் தொண்டன். “இந்து முஸ்லிம் ஒன்றுபடுக” என முழக்கமிட்டவன். நாட்டை அடிமைப்படுத்துகின்ற நாசக்குரல் ஒலிப்பதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருந்திட இயலவில்லை. எனவே, நம்க்குள் ‘பிளவு’ உண்டாக்கும் செயல் யாரால் எப்பொழுது ஆரம்பமாயிற்று. அதனால் நாமும் நாடும் அடைந்த துன்பம் என்ன? என்பதை இக்கால இளைஞர்களின் மனத்திலே பதிய வைத்திட இச்சிறு நூலை யாத்துள்ளேன். காந்திஜீயை வாயால் வாழ்த்திப் பயன் இல்லை. அவர்கள் எண்ணத்தைச் செயல்படுத்த இந்து முஸ்லிம் ஒற்றுமை இன்றும் வேண்டும். இனியும் வேண்டும், என்றும் வேண்டும்.