தேர்வு என்றாலே முதலில் நமக்கு தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்வை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதி, பலமான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று இங்கேயே பணி புரிய வேண்டும் என்ற மன நிலை உள்ளது. அதிலும் தமிழக அரசின் தேர்வை மட்டுமே எழுதும் எண்ணமும் நம்மிடம் உள்ளது. இந்த நிலையிலிருந்து மாறி, மத்திய அரசால் நடத்தப்படும் குடிமையியல் பணி தேர்வானாலும் சரி, Grou B மற்றும் இதர தேர்வுகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை மாணவர்களிடையே வளர வேண்டும்.