நூலின் பெயர்: எனக்கு ஏன் கனவு வருது
பெயர்:எஸ்.ராமகிருஷ்ணன்
ஒரு நாள் கனவு வந்திருது. மனுஷங்களைக் கடலில் இழுத்து வச்சி ரெண்டு அடி கொடுக்கிற மாதிரி…ஆனா, கடலில் வேற யாருக்குமே கனவுன்னா என்னன்னு தெரியிறதில்ல…அதோட அம்மா, அக்கா யாருக்குமே !அதனால், அந்தப் பெரிய கடல் முழுக்க இருக்கிற ஒவ்வொரு உயிரினமாப் போய்ப் பார்த்துக் கனவு பற்றித் தெரிஞ்சுக்க முயற்சி செய்யுது குபுக். அதுங்களோட பேரும், அதுங்க கனவு பற்றித் தெரியாம உளறிக் கொட்டி ‘குபுக்’ கிட்ட மாட்டிக் கிட்டு முழிக்கிறதும் ஒரே தமாஷ் தான் போ! ஆனால் எத்தனை பெயர்களை நான் இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்…கடல் குதிரை, கடல் பசு, கடல் ஆமை, கடல் பாம்பு, கடல் நாய், அப்புறம் கோபமாய்த் துடிக்கும் திமிங்கிலம் இவங்களை நம்ம குபுக் சமாளிக்கிற சாகசம்..வெந்நீர் ஊற்றுல தப்பிச்சி கனவு விதைகள் இருக்கும் கோளத்தை எடுத்து உடைச்சே போட்டுடுது குபுக். அப்புறம் என்ன, அடுத்த நிமிஷத்தில் இருந்து கடல் வாழ் உயிரினங்கள் எல்லாமும் கனவு காண ஆரம்பிச்சிடுது..என்ன கற்பனை, என்ன அழகான பேச்சுக்கள், என்ன மாதிரி வித விதமான அனுபவங்கள்
Book Name: Enakku Ean Kanavu Varudhu
Book Writer:S.Ramakrishnan
Buy Book:This Tamil Book Available
No product review yet. Be the first to review this product.