/files/aanantharangapillai_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

(0)
(1736 - 1761)
Price: 8,400.00

Book Type
நினைவுக் குறிப்பு, வரலாறு
Publisher Year
2020
18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தற்காலிக வாசிப்புக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில் பிறந்த அனந்தரங்கம் பிள்ளை, புதுச்சேரியின் ஃபிரெஞ்சு ஆளுநராக த்யூப்ளே இருந்தபோது, 1746ல் தலைமை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1756வரை அவர் அந்தப் பதவியில் இருந்துவந்தார். 1761ல் அவர் மரணமடையும்வரை, தொடர்ச்சியாக நாட்குறிப்பில் அன்றாட நிகழ்வுகளைப் பதிவுசெய்துவந்தார். 1736 செப்டம்பர் 6ஆம் தேதி முதல், அவர் மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1761 ஜனவரி பத்தாம் தேதிவரை இந்த நாட்குறிப்புகளை சுமார் 25 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்திருக்கிறார்.

அனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகள் பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியவை. 1755ல் லிஸ்பனில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கம், ஆளுநர் துய்ப்ளேவின் பாதுகாவலர்களாக, வாட்டிகனில் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள சுவிஸ் கார்டுகள் செயல்பட்டது, புதிய வாழ்வைத் தேடி புதுச்சேரிக்கு வந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் பற்றிய குறிப்புகள், துய்ப்ளேவின் துணைவியார் மதாம் துய்ப்ளேவுக்கும் அனந்தரங்கம் பிள்ளைக்கும் இடையிலான மோதல்கள், பிரஞ்சு அரசவைச் செய்திகள் ஆகியவை அவரது நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.