யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கையும் உபதேசமும்
ஒரு துளி அமுதம்
பக்தர்கள் கிரிவலம் வருவதை மிகவும் ஊக்குவித்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அவர் திருவண்ணாமலைக்கு வந்த புதிதில் “ அருணாசல சிவ அருணாசல சிவ அருண ஜடா “ என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே பலமுறை கிரிவலம் வந்திருக்கிறார்.
அவ்வாறு அண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வர இயலாதவர்களுக்கு தன் ஆசிரமத்திலேயே கிரிவலப் பாதையை அமைத்து, “ இங்கு கிரிவலம் வருவதும் நல்ல பலனைக் கொடுக்கும் “ என்று சொல்லியிருக்கிறார். “ இங்கு கிரிவலம் வருவது அண்ணாமலையை கிரிவலம் வருவதற்குச் சமம்” என்றும் எடுத்துரைத்திருக்கிறார்.
அதுபோல அண்ணாமலையார் ஆலயத்தில், அருணாசலேஸ்வரர் இருக்கும் பிரகாரத்தை ஸ்தல விருகூசத்தோடு சேர்த்து ஏழுமுறை வலம் வருவதும் கிரிவலம் வருவதைப் போன்றுதான் என்று சொல்லியிருக்கிறார். ஒரு பக்தர் அது பற்றி எழுப்பிய சந்தெகத்திற்கு, “அவ்வாறு ஆலயத்தை ஏழுமுறை வலம் வருவதை தந்தை கிரிவலமாகவே எடுத்துக் கொள்வார்” என்றும் உறுதயளித்தார் யோகி.
பகவானின் கட்டளைப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வந்துள்ளனர், பலன் பெற்றுள்ளனர்.