பௌத்த,சமணக் கோட்பாடுகளை விரிவான களத்தில் எடுத்து வைத்து அவற்றின் பன்முகத் தன்மைகளை விளக்கியிருக்கும் முயற்சி தமிழ் அற இலக்கியங்களில் அவற்றை வைத்து ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்ப்பதற்குக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது. --கவிஞர் ஈரோடு தமிழன்பன்
இந்நாட்டின் தொல்பழம் சிந்தனைகனைக் கருவூலமாக விளங்கும் பௌத்த,சமண அறக்கோட்பாடுகளைப் பற்றிய அடிப்படை நூல்களை ஆழமாகப் பயின்று தமிழ் அறஇலக்கியங்களில் அவற்றின் தாக்கத்தினை இந்த நூலில் அழகாகவும் சிறப்பாகவும் ஆராய்ந்துள்ளார். --முனைவர் சோ.ந.கந்தசாமி
இந்நூ ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ் அறஇலக்கியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பௌத்த, சமண அறவியற் சிந்தனைகளை வரையறுத்தல் ஆகிய நோக்கங்களை இந்நூல் முன்வைக்கிறது.