இந்த உலகம் முழுதும் பெண்கள் மட்டுமே நிரம்பி வழிந்தால், கொப்பளிக்கும் காமம் எந்த வடிவம் பெறும்? பெண்ணுலகம் ஒரு பேரொளியை கண்டடைய, ஆணின் மேலோங்கிய திமிர் எப்படி எளிதாக புறந்தள்ளப்படுகிறது? பெண்ணின் உடல் சார்ந்த உலகம் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக எவ்விதம் பொய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது? எனவாக நீளும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் துளியும் ஒப்பனையின்றி முன் வைக்கிறது வா.மு.கோமுவின் மரப்பல்லி நாவல்! ஒருபால்காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதன்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது!