கற்பனைக் குதிரை
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நீங்கள் பகடையை உருட்டி ஆபத்து நிறைந்த பாதைகளில் மீட்டு வரப்போகிறீர்கள். சுவாரசியமான கதையை வாசிக்கும் அனுபவத்துடன் இளவரசியை மீட்கிற விளையாட்டும் இணைந்து இது ஒரு பேரனுபவமாக மாறிவிடுகிறது. கற்பனைக் குதிரையில் பயணிக்கத் தயாராக இருங்கள்