"உணர்வின் அடிப்படையாக எனக்குப் பசி இருக்கிறது. பசி காமமாகவும் வெளிப்படுகிறது. காமமும் பசியும் இணைந்தே என் உடலை உருவாக்குகின்றன. பசியை வெளிப்படையாக என்னால் தீர்த்துக்கொள்ள முடிகிறதென்றால், காமத்தை என் அறிவின் மூலம் வென்றெடுக்கப் பயிற்றுவிக்கப் படுகிறேன். பயின்றுகொண்ட அறிவானது கலையாக வெளிப்படுத்தப்பட்டால் அவ்வெளிப்பாட்டின் வழியே என் தாபம் மனதின் முழுமையைத் தீர்த்துக்கொள்கிறது. அவ்வறிவு புணர்விலிருந்து வேறொரு உணர்வை எனக்குள்ளே பெரிதாக்குகிறது. அவ்வுணர்வெழுச்சி புணர்வை இரண்டாம் இடத்திலும் கலையை முதன்மையானதாகவும் உடலுக்குச் சொல்லிக் கொடுத்தது. அதன் பொருட்டே நான் நடனமாடத் துவங்கினேன்".
நாவலிலிருந்து...
No product review yet. Be the first to review this product.