உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்
நாம் இன்று அனுபவிக்கும் எத்தனையோ வசதிகள் அறிஞர்களின் எண்ண ஓட்ட்த்தில் தோன்றிய சிந்தனை மின்னல்களால் உதித்த கண்டுபிடிப்புகளால் தான் சாத்தியமாயின.
பெரும்பாலனவர்கள் தங்கள் மனதில் தோன்ரும் கருத்துகளை அசைபோட மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவதெல்லாம் ஒரு நொடிச் சிந்தனை காரணமாக இந்த உலகம் எப்படி மாற்றப்பட்டிருக்கிறது. என்பது பற்றிதான்.
அந்த நொடிப் பொழுதில் அவர்கள் அவற்றை இவ்வளவு அலட்சியம் செய்திருந்தால் நமக்குக் கிடைத்திருக்கும் இத்தனை வசதிகளும் இல்லாமலே போயிருக்கலாம்.
இதைப் படிக்கும் போது இவ்வளவு சின்ன விசயம் இவ்வளவு சாதித்திருக்கிறதா என்று விழிகளை விரிப்பீர்கள். நமக்குகூட இப்படி ஒரு நேரம் தோன்றியதே என்று எண்ணுவீர்கள்.
உலகம் உருண்டையானது என்று முதலில் சொன்னவனையும் இந்த உலகம் அப்படித்தான் பார்க்கிறது.
ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கலாம். பெரிதாக்குங்கள் அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும்.