சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
இடி முழங்கியது. பலத்த மழை பெய்தது ஏரியில் நீர் புரண்டு கொந்தளித்தது ஓசையிட்டது. பெரிய அலைகள் கரையில் வந்து மோதின. அந்த வசந்த்த்தின் முதலாவது இடியும் மழையுமாயிருந்த்து அது. நான் அவளது காதில் முனகினேன். “சிவப்புத் தலைக்குட்டை அணிந்த என் சிறிய பாப்ளார் மரக்கன்று நீ! உனக்கு வேதனை தரும் எதையும், யாரையும் நான் அனுமதிஉக்க மாட்டேன்.” தொடங்கியது போலவே காற்றும் இரசைச்சலும் முடிவடைந்தன.