ஜாக் லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். இந்த கானகத்தின் குரல் என்ற நாவல் ,ஒரு நாயின் கதை மட்டுமல்ல ,தன் ஆதிகுணத்தை மறந்து அமைதியாக வாழும் ஜீவன் ,இடையில் மிகுந்த தொல்லைகளுக்கும் கொடூரமான அடக்கு முறைகளுக்கும் ஆட்படும்போது ஜீவ மரணப் போராட்டத்தில் நாளைய வாழ்வு நிச்சயமில்லை என்ற நிலை முன்னிற்கும் போது,அந்த ஜீவன் தவிர்க்க இயலாமல் மீண்டும் தன் ஆதிக்குணத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் எற்படுகிறது.