ஏன் எதற்கு எப்படி என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படையிலிருந்தே தொடங்குகின்றன. வெங்காயம் நறுக்கும்போது கண்கள்
எரிந்து கலங்குவதும் கண்ணாடியை வைரம் கொண்டு அறுப்பதும் கூட ஏன் என்று தெரியாது.
“ நீரிழிவு நோயின் தலை நகர் “ எதுவென இந்த நூலின் வாயிலாகத் தெரிந்து கொள்ளும்போது
அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்நூல் ஒரு நாளுக்கு ஒரு தகவல் அறிந்து கொள்ளும் எளிய முறையுடன் 365 படங்களுடன் வாசகர்களுக்கு அறிமுகமாகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலதரப்பினரும் பயன் படுத்தலாம்..